வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, போலீசார் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள், அங்கிருந்து சதி திட்டம் தீட்டுகின்றனரா; ஜாமினில் வெளியே வந்துள்ள ரவுடிகளின் அன்றாட நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
எனினும், ரவுடிகளின் 'ஆட்டத்தை' போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புற்றீசல்கள் போல, அரசியல் சார்பு ரவுடிகள் அதிகரித்து வருகின்றனர்.ரவுடிகளை ஒடுக்குவது காலத்தின் கட்டாயம். அப்போது தான், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.அதற்காக, ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என, ஐ.ஜி.,க்கள், கமிஷனர்கள், எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து,
![]()
|
குற்றவாளிகளின் வழக்கு விபரம், புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். 'டிஜிட்டல்' முறையில் பட்டியல் தயாரித்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement