ஆரணி அருகே, மர்மமான முறையில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தது குறித்து, அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மொழுகம்பூண்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல், 45. இவர் மனைவி ரேவதி, 41. இந்த தம்பதிக்குள் இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். அனைவரும், ஆரணி டவுன், அம்மன் நகரில் வசித்து வந்தனர்.நான்கு மாதங்களுக்கு முன் தம்பதிக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மகன், மகள்களுடன், ஒண்ணுபுரம் கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டில் ரேவதி தங்கியிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், வெற்றிவேல் பைக் விபத்தில் காயமடைந்தார். நேற்று அதிகாலை அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து, ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மனைவி ரேவதியிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர், நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மூன்று பேர் வீட்டிற்கு வந்து வெற்றிவேலை தாக்கினர் என அவர் கூறியுள்ளார். சந்தேகத்தின்படி அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.