வட கொரியாமீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பான் புகார்| Dinamalar

வட கொரியாமீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பான் புகார்

Updated : அக் 09, 2022 | Added : அக் 09, 2022 | கருத்துகள் (1) | |
சீயோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு போட்டியாக தென்கொரியாவும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதில் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர 'பாலிஸ்டிக் ' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் நேற்று வட கொரியா மீண்டும்
வட கொரியாமீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பான் புகார்

சீயோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு போட்டியாக தென்கொரியாவும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதில் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர 'பாலிஸ்டிக் ' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் பிரமதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, வடகொரியா 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக் ' ரக ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது. முதல் ஏவுகணை 100 கி.மீ. உயரத்துக்கு சென்று 350 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. 2-வது ஏவுகணை 50 கி.மீ. உயரத்திற்கு சென்று 800 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. இவ்வாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X