புதுடில்லி தமிழகத்துக்கு வரும் 30ல் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது.
|
பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ல் தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement