வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசைதிருப்பி நாசா விஞ்ஞானிகள் உலகை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.
பூமியை நெருங்கும் விண்கல்கள், குறுங்கோள்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க தனி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு நெருங்கும் விண்கல்கள் மீது மோதி அவற்றை திசை திருப்பவும், அழிக்கவும் தனி விண்கலங்களையும் அனுப்பி வருகிறது.
![]()
|
பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் துாரத்தில் டிமார்பாஸ் என்ற விண்கல் சுற்றி வந்தது. 525 அடி அளவில் 2500 அடி அகலம் கொண்ட இதை தாக்கி பாதையை திசை திருப்ப நாசா திட்டமிட்டது.
அதன்படி வினாடிக்கு 15,000 மைல் வேகத்தில் அதன் மீது மோத டார்ட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது சரியாக மோதியது. அதிலிருந்து லிசியாகியூப் செயற்கைக்கோள் பிரிந்து இந்த மோதல் சேதங்களை படம் பிடித்தது.
விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டதாக, நாசா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement