ஒருதலைப்பட்சமாக செயல்படுவதா? : தேர்தல் ஆணையம் மீது உத்தவ் புகார்!

Updated : அக் 13, 2022 | Added : அக் 13, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
மும்பை :கட்சிக்கு பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக, உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மஹாராஷ்டிரா மாநில கட்சியான சிவசேனா சமீபத்தில் பிளவுபட்டது. அதில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., ஆதரவைப் பெற்று முதல்வரானார். கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் மோதல்
Election Commission, Shiv Sena, Uddhav Thackeray, தேர்தல் ஆணையம்,  உத்தவ் தாக்கரே, சிவசேனா, மஹாராஷ்டிரா, ஏக்நாத் ஷிண்டே,  Uddhav,   Maharashtra, Eknath Shinde,உத்தவ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மும்பை :கட்சிக்கு பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக, உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


மஹாராஷ்டிரா மாநில கட்சியான சிவசேனா சமீபத்தில் பிளவுபட்டது. அதில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., ஆதரவைப் பெற்று முதல்வரானார். கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டதால் சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் நவ., 3ல் நடக்கும் இடைத்தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டிய சின்னம் குறித்து, சிவசேனாவின் இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரை கடிதத்தை சமர்ப்பித்திருந்தனர். இதில் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தையும், ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு, வாள், கேடயம் சின்னத்தையும் ஒதுக்கியது.


இது குறித்து உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய பரிந்துரை பட்டியலை, ஷிண்டே தரப்பினர் பரிந்துரை பட்டியல் அளிப்பதற்கு முன்பே, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவற்றைப் பார்த்து, 'காப்பி' அடித்து, அதே விபரங்களை ஷிண்டே தரப்பினரும் தங்கள் பரிந்துரை பட்டியலில் தெரிவித்தனர்.



இதற்கு பின் தான், எங்கள் பரிந்துரை பட்டியல், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

cbonf - doha,கத்தார்
14-அக்-202204:39:55 IST Report Abuse
cbonf மஹாராஷ்டிராவில் நடந்த பெரும் ஊழல்களில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. மோதி மூன்றாம் முறையாக பிரதமரானதும் உங்களைப்போன்ற ஊழல் பெருச்சாளிகள் கம்பி எண்ணப்போவது உறுதி
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
14-அக்-202204:39:24 IST Report Abuse
cbonf ஹிந்துத்வ கொள்கையை தொலைத்து - கொள்ளைக்காரர்களுடன் கூட்டுசேர்ந்தீர்களே அப்போது உங்கள் மனசாட்சி எங்கே போனது?
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
14-அக்-202204:38:43 IST Report Abuse
cbonf பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை - எந்த காரணமும் இன்றி - காரணமின்றி அதிகாலையில் - எதோ ஒரு கொள்ளைக்காரனைப்போல் நடத்தி - கைது செய்த சமயம் நீங்கள் பாரபட்சம் இன்றி நடந்துகொண்டீர்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X