ஈராக் பார்லிமென்ட் அருகே ராக்கெட்குண்டு வீச்சு: பலர் காயம் என தகவல்

Updated : அக் 13, 2022 | Added : அக் 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பாக்தாத்: ஈராக்கில் பார்லிமென்ட்டை குறி வைத்து அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி
ஈராக் ,பார்லிமென்ட்,ராக்கெட் ,குண்டு வீச்சு ,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாக்தாத்: ஈராக்கில் பார்லிமென்ட்டை குறி வைத்து அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார். ஈராக் அதிபர் தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.


latest tamil news



இந்நிலையில் இன்று பார்லிமென்டை குறி வைத்து அடுத்தடுத்து 9 முறை ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மிகவும் பாதுகாக்கப்பட்ட பசுமை பகுதி என்றாலும் இங்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், அரசு அலுவலங்கள் உள்ளன.


பாராளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்ற சம்பவம் கடந்த மாதம் பார்லிமென்ட் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர இருந்த சில நிமிடத்திற்கு முன்பாக ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

14-அக்-202213:48:03 IST Report Abuse
ராமகிருஷ்ணன் 📍 குண்டு சரியான இடத்தில் வைத்திருக்கவில்லை.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-அக்-202208:42:00 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இந்த லட்சணத்தில் இந்தியாவை பற்றியும் இந்து மதத்தை பற்றியும் பேசுகிறார்கள். வெட்கமாக இல்லையா.
Rate this:
Cancel
13-அக்-202222:56:22 IST Report Abuse
ஆரூர் ரங் அமைதி அமைதி. எங்கே நிம்மதி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X