வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கலெக்டர் ஆய்வு
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கலெக்டர் ஆய்வு

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கலெக்டர் ஆய்வு

Added : அக் 19, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு அருகே கடலில் கலக்கிறது. 5வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது கொள்ளிடம்

மயிலாடுதுறை: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு அருகே கடலில் கலக்கிறது. 5வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி உபரி வெள்ள நீர் சீற்றம் காரணமாக கடலில் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியே கிராமத்திற்குள் உட்பகுவதால் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது.

பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. மேல்புறம் ஏற்பட்டுள்ள வெள்ள நீரால் பாதிப்பு என்றால் கடல் உள்வாங்காத காரணத்தால் வெள்ள நீர்மட்டம் மேலும் உயர்ந்து கரைகள் உடைப்பு எடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிய வருகிறது.

எனவே பழையாறு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் குறித்து தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டார் தொடர்ந்து அவர் மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X