தென்றல் தரும் மின்சாரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தென்றல் தரும் மின்சாரம்

Added : அக் 20, 2022 | |
சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.இக்கருவி 15 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவு உள்ளது. இதை கட்டடத்திற்கு வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துவிட்டால் போதும்.காற்று லேசாக வீசினாலும் இந்தக் கருவி அசைந்து அதிரும். மூன்று வேறு
Singapore Scientists, Tribo Electric, Electricity, மின்சாரம், தென்றல், நான்யாங் விஞ்ஞானிகள், சிங்கப்பூர் விஞ்ஞானிகள், டிரைபோ எலெக்ட்ரிக்,  Wind, Nanyang Scientists,

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.

இக்கருவி 15 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவு உள்ளது. இதை கட்டடத்திற்கு வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துவிட்டால் போதும்.

காற்று லேசாக வீசினாலும் இந்தக் கருவி அசைந்து அதிரும். மூன்று வேறு விதமான பொருட்களால் ஆன கருவி அசைவதால், 'டிரைபோ எலெக்ட்ரிக்' விளைவு மூலம் மின்சாரம் உற்பத்தியாகும்.

ஒரு சோதனையில், நொடிக்கு நான்கு மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், நான்யாங் விஞ்ஞானிகளின் கருவி தயாரித்த மின்சாரத்தின் மூலம் 40 சிறிய எல்.இ.டி., விளக்குகள் எரிந்தன.

கட்டடங்களுக்கு வெளியே பொருத்தினால், 24 மணி நேரமும் கணிசமான மின்சாரத்தை இக் கருவிகள் உற்பத்தி செய்து தரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X