தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8 அதிகாரிகள் சஸ்பெண்ட்| Dinamalar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Updated : அக் 21, 2022 | Added : அக் 21, 2022 | கருத்துகள் (18) | |
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார்.அதேபோல், சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா
தூத்துக்குடி, துப்பாக்கிச்சூடு, இன்ஸ்பெக்டர், சஸ்பெண்ட், போலீஸ் அதிகாரிகள்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார்.



அதேபோல், சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.



தொடர்ந்து 3 தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி ஆக இருந்த லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X