தேசவிரோத செயல்: டில்லியில் சீன பெண் கைது

Updated : அக் 22, 2022 | Added : அக் 21, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி : போலி அடையாள அட்டை மூலம் டில்லியில் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.டில்லியின் வடக்கு பகுதியில் டிலா என்ற இடத்தில் திபெத்திய அகதிகளுக்கான காலனி உள்ளது. டில்லி பல்கலை அருகேயுள்ள இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். இந்த பகுதியில் புத்த மத துறவி போல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி : போலி அடையாள அட்டை மூலம் டில்லியில் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



latest tamil news

டில்லியின் வடக்கு பகுதியில் டிலா என்ற இடத்தில் திபெத்திய அகதிகளுக்கான காலனி உள்ளது. டில்லி பல்கலை அருகேயுள்ள இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். இந்த பகுதியில் புத்த மத துறவி போல் காணப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர்.



அப்போது அவர், தனது பெயர் டோல்மா லாமா எனக்கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அதேபெயரில் நேபாள குடியுரிமை சான்றிதழ் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு, அவரை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது உண்மை அம்பலமானது.




latest tamil news

அதில், அந்த பெண் சீனாவை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2019 சுற்றுலாவில் இந்தியா வந்தது தெரியவந்தது. சீனாவின் ஹைனன் மாகாணத்தை சேர்ந்த கெயி ரூயோ என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

Aarkay - Pondy,இந்தியா
22-அக்-202201:38:57 IST Report Abuse
Aarkay நம்மவர்களும் பெண் என்றால், பல்லை இளித்து எல்லா ரகசியங்களையும் எளிதில் கொட்டிவிடுவார்கள். அதிலும் வெளிநாட்டு பெண் என்றால், இன்னமும் அதிகம் ஜொள்ளு விடுவார்கள்.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
22-அக்-202213:23:32 IST Report Abuse
MARUTHU PANDIAR-தொடர் கதையாக வந்துட்டு தானே இருக்கு.......
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
21-அக்-202219:33:28 IST Report Abuse
MARUTHU PANDIAR தமிழு இலக்கியம் படிக்கிறோம்,,தமிழு சொற்பொழிவு ஆற்றுகிறோம் ,கலாச்சாரம் படிகிக்கிறோம் அப்படீன்னுட்டு இங்க உள்ள ஆசாமிகள் வீக்னஸை பயன் படுத்திக்க கொண்டு ஓப்பனாகவே , நடமாடுறாளுவ+++++++பிடிச்சு உள்ளே தள்ளனும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
22-அக்-202213:24:48 IST Report Abuse
pradeesh parthasarathy......
Rate this:
Cancel
Mangal - Mmumbai,இந்தியா
21-அக்-202217:50:24 IST Report Abuse
Mangal பிரிவினை வாதிகள் இருந்தால் தானே கண்டு பிடிக்க முடியும் கற்பனை செய்து கொண்டால் கனவில் தான் தேட வேண்டும் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
22-அக்-202201:10:21 IST Report Abuse
naadodiஇன்னா சொல்றீய ) அரசே பிரிவினை வாதிகள் என்றா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X