சவுதி பிரதமர் இந்திய வருகை: முதலீடு, வர்த்தகம் முக்கிய 'அஜென்டா'

Updated : அக் 25, 2022 | Added : அக் 25, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: சவுதியின் பட்டத்து இளவரசரும், சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான முகமது பின் சல்மானின் இந்திய வருகையின் போது, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை முக்கிய திட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி 20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முகமது பின் சல்மான் செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக வரும் 14 ம் தேதி டில்லி வருகிறார்.
சவுதி பிரதமர் இந்திய வருகை: முதலீடு, வர்த்தகம் முக்கிய 'அஜென்டா'

புதுடில்லி: சவுதியின் பட்டத்து இளவரசரும், சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான முகமது பின் சல்மானின் இந்திய வருகையின் போது, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை முக்கிய திட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.



இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி 20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முகமது பின் சல்மான் செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக வரும் 14 ம் தேதி டில்லி வருகிறார். அங்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை, முகமது பின் சல்மான் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.



latest tamil news


சவுதி பிரதமரின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை இருக்கும் எனவும், அது குறித்து இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் எனவும் டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 43 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இந்திய காலணிகள் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் முக்கிய சந்தையாக சவுதி உள்ள நிலையில், இன்னும் அதிகம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா எதிர்பார்க்கிறது. அதேபோல், இந்தியாவின் பெட்ரோ கெமிக்கல் துறையில் தனது எல்லையை விரிவுபடுத்த முடியும் சவுதி நம்புகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Tamilan - NA,இந்தியா
26-அக்-202207:31:10 IST Report Abuse
Tamilan . மாயை, பொருளாதார விஞ்சான மாயை , ஆசை பேராசை ஆகியவற்றால் ஒருவர் முதுகின் மேல் மற்றொருவர் ஏற நினைப்பது விபரீதத்தில் முடியலாம் .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
26-அக்-202207:02:24 IST Report Abuse
Tamilan இப்போதோ அரசே வியாபாரம் செயகிறது, மற்ற மதவாத நாடுகளுக்கு அடிமைப்பட்டு இப்படி ஒரு காரியத்தில் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு அரசியல் சட்ட அரசுகள் ஈடுபடுகின்றன .
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-அக்-202216:20:56 IST Report Abuse
சீனி எப்பவும், இந்தியா வந்தால், இஸ்லமாபத்தும் லிஸ்டில் இருக்கும், இந்தவாட்டி விமானத்திலிருந்து வெறும் டாட்டா மட்டுமே காட்டுவார் போல இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X