பெரம்பலுார்,--அரியலுார் மாவட்டம், பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன், 30; புரோட்டா மாஸ்டர்.
அவரது மனைவியின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால், அவரது, 9 வயது மகளை, செந்தமிழ்செல்வன் வீட்டில் விட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை, 7ம் தேதி, மனைவி வெளியூர் சென்றிருந்த போது, செந்தமிழ்செல்வன், தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது பற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், செந்தமிழ்செல்வனை கைது செய்தனர்.
அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை பலாத்காரம் செய்த சித்தப்பா செந்தமிழ்செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், 56 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும், அரசு தரப்பில், சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக, 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.