தி.மு.க., நிர்வாகியால் பத்திரப்பதிவு பாதிப்பு

Added : அக் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மரக்காணம்,-விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். தி.மு.க., கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலர்.இவர், நேற்று மதியம் மரக்காணம் சார் பதிவாளர் காமேஷிடம் அடமானத்தில் இருந்த ஒரு பத்திரத்தை பதிவு செய்வது குறித்து பேசியுள்ளார்.அதற்கு சார் - பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த தி.மு.க., பிரமுகர் முருகன், 10க்கும் மேற்பட்ட



மரக்காணம்,-விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். தி.மு.க., கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலர்.

இவர், நேற்று மதியம் மரக்காணம் சார் பதிவாளர் காமேஷிடம் அடமானத்தில் இருந்த ஒரு பத்திரத்தை பதிவு செய்வது குறித்து பேசியுள்ளார்.

அதற்கு சார் - பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த தி.மு.க., பிரமுகர் முருகன், 10க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்து, சார் - பதிவாளர் காமேஷை ஒருமையில் பேசியுள்ளார்.

இதனால் பத்திரப்பதிவு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

இனியும் தகராறு செய்தால், போலீசில் புகார் கூறுவேன் என, அதிகாரி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அந்த தி.மு.க., நிர்வாகி தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.

இந்த சம்பவத்தால் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202206:36:57 IST Report Abuse
Mani . V எது தி.மு.க. ரௌடியால் ஸாரி நிர்வாகியால் பத்திரப்பதிவு பாதிப்பா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X