330% உயர்ந்த மாருதியின் லாபம்: பங்கு வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்

Updated : அக் 28, 2022 | Added : அக் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாருதி சுசூகி இந்தியாவின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைக் காட்டிலும் 334% உயர்ந்து ரூ.2061.5 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன் மாருதி சுசூகி பங்குகள் 2 மணிக்கு பின்னர் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது.ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த ஆண்டு கஷ்ட காலமாக சென்றது.
MarutiSuzuki, MarutiShares, StockIdeas, Stocks, Shares, Trading, Automobile, மாருதி

மாருதி சுசூகி இந்தியாவின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைக் காட்டிலும் 334% உயர்ந்து ரூ.2061.5 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன் மாருதி சுசூகி பங்குகள் 2 மணிக்கு பின்னர் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது.

ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த ஆண்டு கஷ்ட காலமாக சென்றது. மூலப் பொருட்கள் விலை உயர்வு, சிப் தட்டுப்பாடு ஆகியவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விற்பனை மந்தமானது. லாபம் சரிந்தது. தற்போது அந்த பிரச்னைகள் குறைந்து மாருதி சுசூகியின் விற்பனை அதிகரித்துள்ளது, நிறுவனத்தின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. சர்வீஸ் போன்ற பிற வகையிலான வருமானமும் கூடியதால் லாபம் ரூ.475.3 கோடியிலிருந்து ரூ.2,061 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 46 சதவீதம் உயர்ந்து ரூ.29,931 கோடியாக அதிகரித்திருக்கிறது.


latest tamil news

செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் மாருதி சுசூகி மொத்தம் 5.17 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. இவற்றில் 4.54 லட்சம் யூனிட்கள் உள்நாட்டிலும், 63,195 யூனிட்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டவை. இந்த அளவு இதுவரை எந்த காலாண்டிலும் விற்பனை பதிவானதில்லை. கடந்த ஆண்டை விட விற்பனை அளவு 36 சதவீதம் அதிகம். மின்னணு உதிரிபாகங்களின் பற்றாக்குறை இந்த காலாண்டில் சுமார் 35,000 வாகனங்களின் உற்பத்தியை பாதித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டு முடிவில் வாடிக்கையாளர்களுக்கான நிலுவையில் உள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை சுமார் 4.12 லட்சம் வாகனங்களாக உள்ளது. இதில் 1.3 லட்சம் வாகன முன்பதிவுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களுக்கானது.


latest tamil news

நடப்பு 2023 நிதியாண்டின் 6 மாத கால செயல்பாடுகளை பார்க்கையில் மாருதியின் வளர்ச்சி கடந்த 2022 அரையாண்டை விட 236 சதவீதம் வளர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்த லாபம் ரூ.3,074.3 கோடி. வருவாய் 47% அதிகரித்து ரூ.56,430 கோடியாக உள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியானதும், பிற்பகல் வரை மந்தநிலையில் இருந்த மாருதி சுசூகியின் பங்கு வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

பங்கு ஒன்றின் விலை ரூ.9,062லிருந்து 485 ரூபாய் அதாவது 5.3% உயர்ந்து, ரூ.9,548 ஆக வர்த்தகத்தை நிறைவுச் செய்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் இப்பங்குகளின் விலை உயர்ந்தன. இந்தாண்டில் இதுவரை 27% உயர்ந்துள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (1)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
28-அக்-202221:45:51 IST Report Abuse
Barakat Ali மாருதி சுசுகி உட்பட ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிந்தும் கூட பங்கின் மதிப்பு கூடியது எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X