சந்திரசேகர் ராவ் மகளுடன் தி.மு.க., பிரமுகர் ரகசிய பேச்சு

Updated : அக் 30, 2022 | Added : அக் 30, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் மிகவும் 'பவர்புல்' நபர். ஆனால், சமீபகாலமாக இவருக்கும், கட்சிக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது. சந்திரசேகர ராவ், தன் கட்சியை தேசிய கட்சியாக அறிவிக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவிதா பங்கேற்கவில்லை. அடுத்து, தெலுங்கானாவில் சட்டசபைக்கான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் மிகவும் 'பவர்புல்' நபர். ஆனால், சமீபகாலமாக இவருக்கும், கட்சிக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது. சந்திரசேகர ராவ், தன் கட்சியை தேசிய கட்சியாக அறிவிக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவிதா பங்கேற்கவில்லை.



latest tamil news


அடுத்து, தெலுங்கானாவில் சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதியின் பொறுப்பாளர் பட்டியலிலும் கவிதாவின் பெயர் இல்லை. இதையடுத்து, குடும்பத்தில் ஏதும் குழப்பமா என கட்சி தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வட்டாரத்தில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது, கவிதா ஒரு முக்கிய தி.மு.க., பிரமுகருடன் அடிக்கடி பேசி வருகிறாராம். இவர் உதவியுடன் கவிதா பல திட்டங்களை தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.


latest tamil news

இந்த தி.மு.க., பிரமுகர், கர்நாடகாவின்முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியுடனும் அடிக்கடி பேசி வருகிறாராம்.

'இவர் கவிதாவுடனும், குமாரசாமியுடனும் ஏன் பேசுகிறார், என்ன பேசுகிறார்; எதற்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை; ஒரு வேளை கட்சியிலிருந்து வெளியேற திட்டம் தீட்டுகிறாரா?' என கட்சியின் சீனியர் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். இது, தி.மு.க., தலைமையையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

30-அக்-202211:35:57 IST Report Abuse
அருணா எங்கே திமுக ரகசியமோ அங்கே வில்லங்க அதிசயம் வரும்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
30-அக்-202211:20:50 IST Report Abuse
பாமரன் எதிரி கட்சிகளின் எல்லா ரகசியங்களையும் கண்டுபுடிச்சிடறாய்ங்க...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-அக்-202211:03:24 IST Report Abuse
அசோக்ராஜ் ஒத்த வாழ்வியலில் உள்ள கொள்ளையர்கள் அவ்வப்போது ப்ரெயின்ஸ்டார்மிங் செய்வது அவர்களுக்கு ஆதாயம் தானே? இதில் மூன்றாம் மனிதர்களுக்கு என்ன அக்கறை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X