பொது சிவில் சட்டம் தேவை தான் புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி
பொது சிவில் சட்டம் தேவை தான் புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

பொது சிவில் சட்டம் தேவை தான் புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பாவ்நகர்-''பொது சிவில் சட்டம் தேவை தான். ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ., ஏமாற்றுகிறது,'' என, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புதுடில்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாவ்நகர்-''பொது சிவில் சட்டம் தேவை தான். ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ., ஏமாற்றுகிறது,'' என, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news


குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:

பொது சிவில் சட்டம் தேவை தான். அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு, இதை அமல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ளது என்று கூறுகிறது. அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி இதை செயல்படுத்த வேண்டும்.

குஜராத் சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை அமைப்பதாக பா.ஜ., அரசு கூறியுள்ளது.


latest tamil news


உத்தரகண்டிலும் தேர்தல் நடப்பதற்கு முன் இவ்வாறு கூறினர். தேர்தலில் வென்ற பின் மறந்து விட்டனர். பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் ஏன் இதை செயல்படுத்தவில்லை?

நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக ஏன் கூறவில்லை? லோக்சபாவுக்கு தேர்தல் வரும் நேரத்தில், இதற்கான அறிவிப்பை பா.ஜ., வெளியிடுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

Dharmavaan - Chennai,இந்தியா
31-அக்-202212:33:48 IST Report Abuse
Dharmavaan அண்ணா ஹசாரே கொள்கையை தோண்டி புதைத்து முழு ஊழல் பேர்வழியாகிவிட்ட ஏமாற்று பேர்வழி கெஜ்ரிவால்.
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
31-அக்-202212:19:58 IST Report Abuse
Pandi Muni பொது சிவில் சட்டம் வேண்டும். இலவசங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஊழல் ஆட்சியாளர்கள் ஒழிக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
31-அக்-202211:41:29 IST Report Abuse
thamodaran chinnasamy கெஜ்ரிவாலுக்கு எல்லாமே மனபிராந்திப்போல, என்ன பேசுகிறோம் என்றே இவருக்குத்தெரியாது. எப்படி இவனெல்லாம்ம்ம்ம், என்னமோ போங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X