கோவிட் முடிவுக்கு வந்துவிட்டது மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி-கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து, தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாடு முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கடந்த 27 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3,000க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் 10க்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து, தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.



latest tamil news


நாடு முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கடந்த 27 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3,000க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் 10க்கும் குறைவாகவே உள்ளது.

கொரோனா பரவலின் தற்போதைய நிலை குறித்து புதுடில்லி மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

வழக்கமான, 'ப்ளூ' காய்ச்சலின் அறிகுறியும் கொரோனா அறிகுறியை போல தான் உள்ளது. ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கொரேனாவால் பாதிக்கப்படுவோருக்கு மிக லேசான அறிகுறிகளே உள்ளன.


latest tamil news


முன் இருந்ததை போல, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாவது இல்லை. அதே நேரம், முதியோர் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட துவங்கிவிட்டோம். தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், வைரஸ் உருமாற்றம் அடைவது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அச்சப்பட தேவையில்லை. அதன் தீவிர தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மட்டும் தொடர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
31-அக்-202214:12:45 IST Report Abuse
Vijay D Ratnam இருந்தாலும் அவ்வப்போது சானிட்டைஸர் உபயோகிப்பதையும், சோப்பு போட்டு கைகளை கழுவுவதையும், மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் மாஸ்க் அணிவதையும் வழக்கமாக்கி கொள்வோம்.
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
31-அக்-202210:35:04 IST Report Abuse
BALOU உண்மை ஊசி போட்டவர்களை பெரிய அளவில் கோவிட் பாதிப்பதில்லை ஆனால் கோவிட் இன்னும் நம்மிடையே உள்ளது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
31-அக்-202209:59:38 IST Report Abuse
Sampath Kumar நம்பிட்டோம் அடுத்து என்ன ஏற்பாடு ? மட்டன் குனியாவா ? எதனாலும் சொல்லி ட்டு செய்ங்கடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X