நகராட்சி அதிகாரி தமிழக அரசுக்கு சாபம்! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உருக்கம்

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
வால்பாறை:நகராட்சி குடியிருப்புக்கு, 'சீல்' வைத்த அதிகாரி, தி.மு.க.,வினர் தலையீடால் பணி மாற்றம் செய்யப்பட்டார். அரசுக்கு சாபம் விட்டு, அந்த அதிகாரி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான, 56 குடியிருப்புகளில், பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 11 பேர் வீட்டை காலி செய்யாமல் இருந்தனர்.

வால்பாறை:நகராட்சி குடியிருப்புக்கு, 'சீல்' வைத்த அதிகாரி, தி.மு.க.,வினர் தலையீடால் பணி மாற்றம் செய்யப்பட்டார். அரசுக்கு சாபம் விட்டு, அந்த அதிகாரி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



latest tamil news


நகராட்சி அதிகாரி கண்ணீர் மல்க வீடியோ

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான, 56 குடியிருப்புகளில், பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 11 பேர் வீட்டை காலி செய்யாமல் இருந்தனர். வீட்டை காலி செய்யக்கோரி, நகராட்சி சார்பில் பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சி கமிஷனர் பாலு உத்தரவின்படி, நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி தலைமையிலான அதிகாரிகள், போலீசார் முன்னிலையில், கடந்த வாரம் காலி செய்யப்படாத வீடுகளை பூட்டி, 'சீல்' வைத்தனர். வீடுகளுக்கு 'சீல்' வைத்த, நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2.30 நிமிடம் கொண்ட வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது:

வால்பாறை நகராட்சி கமிஷனர், தலைவர், தி.மு.க., நகர செயலாளர் ஆகியோரின் உத்தரவின்படி தான், வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தேன்.

இதற்காக, என்னை, நெல்லியாளம் நகராட்சிக்கு பணி மாற்றம் செய்துள்ளனர். நேர்மையாக பணி புரிந்தால் பணி மாற்றமா? இது தான் திராவிட மாடலா? தினமும் எவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறேன் பாருங்கள் (மாத்திரை பார்சலை காட்டுகிறார்). என் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். என் சாபம் உங்களை சும்மாவிடாது. அமைச்சர் சொன்னாலும், அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று முதல்வர் விசாரிக்க வேண்டாமா. இது தான் திராவிட மாடல் ஆட்சியா...

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news


அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''எனக்கு பெயர் வைத்ததே கருணாநிதி தான். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக, என்னை பணிமாற்றம் செய்துள்ளனர். அந்த ஆதங்கத்தில் வீடியோ வெளியிட்டேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

Sridharan - Coimbatore,இந்தியா
31-அக்-202217:37:43 IST Report Abuse
Sridharan இங்கு கோவை நகராட்சி அலுவலகங்கிளில் வந்து பாருங்கள். தினமும் மக்கள் படும் அவஸ்தையை. காந்தியை காட்டாமல் எதுவும் நடக்காது. கொடுமையான ஆட்சி இந்த திராவிட மாடல் ஆட்சி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
31-அக்-202215:51:18 IST Report Abuse
r.sundaram நேர்மையானவருக்கு பனி மாற்றுதல் உத்தரவு, இதுதான் திராவிட மாடல். ஆனால் அரசு எப்படி செயல்படுகிறது,
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
31-அக்-202213:14:08 IST Report Abuse
neo இப்போ வருவாரு பாருங்க நம்ம அண்ணாமலை கருத்து சொல்றதுக்கு.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
31-அக்-202217:31:14 IST Report Abuse
கல்யாணராமன் சு.நீங்க வந்துட்டீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X