மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து அக்கட்சி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், 'திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத் பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு மூன்று நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். ஷீரடியில் நவம்பர் 4, 5ம் தேதியில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பார். மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.