37 ஆண்டுகள் மனநிறைவுடன் பயணித்தேன் : தலைமை நீதிபதி யு.யு. லலித் உருக்கம்

Updated : நவ 07, 2022 | Added : நவ 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ''உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய, 37 ஆண்டு கால பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனநிறைவுடன் கடந்து வந்துள்ளேன்,'' என, பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், 64, தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் யு.யு.லலித், நாளையுடன் (நவ.08) பணி ஓய்வு பெறுகிறார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்றம்
 37 ஆண்டுகள், மனநிறைவு,   தலைமை நீதிபதி ,லலித் உருக்கம்


புதுடில்லி: ''உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய, 37 ஆண்டு கால பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனநிறைவுடன் கடந்து வந்துள்ளேன்,'' என, பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், 64, தெரிவித்தார்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் யு.யு.லலித், நாளையுடன் (நவ.08) பணி ஓய்வு பெறுகிறார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தினால், தலைமை நீதிபதியின் பணி ஓய்வு அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.



latest tamil news

அப்போது தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியதாவது:
மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான், உச்ச நீதிமன்றத்தில் என் பணியை துவங்கி, 37 ஆண்டுகள் ஆகிறது.

இங்குள்ள நீதிமன்ற எண் 1ல், அப்போதைய தலைமை நீதிபதி யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் முன்னிலையில், என் முதல் வழக்கில் ஆஜரானேன்.
இப்போது அவரது மகனிடமே தலைமை நீதிபதி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பணி ஓய்வு பெறுவது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த 37 ஆண்டு கால பயணம் மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் மிக்க மகிழ்வுடன் கடந்து வந்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Dharmavaan - Chennai,இந்தியா
08-நவ-202208:14:55 IST Report Abuse
Dharmavaan நீதி துறையிலும் வாரிசு உரிமையோ
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-நவ-202205:53:17 IST Report Abuse
Kasimani Baskaran இனிய ஓய்வாக மனதுக்கு பிடித்தவைகளை செய்ய வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X