பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணத்திற்கு பதிலாக வறுமைதான் வந்தது: ராகுல் விமர்சனம்

Updated : நவ 08, 2022 | Added : நவ 08, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆனதையடுத்து காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் வரவில்லை, வறுமைதான் வந்தது' என விமர்சித்துள்ளார்.பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பதாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்பப்பெற்றன. அதற்கு
Congress, Rahul, Demonetisation, Black Money, Poverty, Economy, காங்கிரஸ், ராகுல், பணமதிப்பிழப்பு, கருப்பு பணம், வறுமை, பொருளாதாரம்

புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆனதையடுத்து காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் வரவில்லை, வறுமைதான் வந்தது' என விமர்சித்துள்ளார்.



பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பதாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்பப்பெற்றன. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழித்துவிடுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.



latest tamil news

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் (நவ.,8) ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தன. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளதாவது:


கருப்புப் பணம் வரவில்லை, வறுமைதான் வந்தது. பணமில்லா பொருளாதாரம் ஆகவில்லை, பொருளாதாரம் பலவீனமானது. ஒழிந்தது பயங்கரவாதம் அல்ல, கோடிக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், 'ராஜா' '50 நாட்கள்' வாக்குறுதியுடன் பொருளாதாரத்தை ஒழித்து விட்டார். இவ்வாறு பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

09-நவ-202207:34:18 IST Report Abuse
பேசும் தமிழன் yaar ஊழல் செய்து கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருந்தார்கள் .....அவர்கள் தான் புலம்பி கொண்டு உள்ளார்கள் ....எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
09-நவ-202203:18:36 IST Report Abuse
Siva கருப்பு பணம் காங்கிரஸ் ஆச்சியின் விளைவு அதை பிஜேபி மீட்க்க முடியலனு சொல்லுறார் ராகுல். காங்கிரஸ் திருடர்கள் பெரிய திருடர்கள் அவர்கள் கிட்ட இருந்து கருப்பு பணத்தை மீட்பது அவ்வளவு எளிது இல்லை. பிஜேபியின் செயல் காங்கிரசுக்கு பிடிக்கவில்லை, அப்போ அது கரெக்ட்தானு சொல்லு .
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
08-நவ-202223:15:10 IST Report Abuse
Kalyanaraman காங்கிரசை வறுமையில் உள்ளதைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X