மேயர் அணிவித்த 10 சவரன் செயின்: கடுப்பாகி கழற்றிய அமைச்சர்

Added : நவ 10, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
ஓசூர்: ஓசூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் காந்திக்கு, ‍மேயர் சத்யா, 10 சவரன் தங்க செயின் அணிவித்தபோது, கடுப்பாகிய அமைச்சர், அதை உடனடியாக கழற்றினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாநகர செயலர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி,
Mayor Sathya, Gold Chain, Minister Gandhi, ஓசூர், மேயர் சத்யா, தங்க செயின், திமுக, அமைச்சர் காந்தி, Hosur,  DMK,

ஓசூர்: ஓசூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் காந்திக்கு, ‍மேயர் சத்யா, 10 சவரன் தங்க செயின் அணிவித்தபோது, கடுப்பாகிய அமைச்சர், அதை உடனடியாக கழற்றினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாநகர செயலர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர்.

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, மேயர் சத்யா, கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். கூட்டத்தில், ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து, ஒரு லட்சம் துண்டு பிரசுரங்களை அடிச்சடித்து வீடுகள் தோறும் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அமைச்சர் காந்தி மற்றும் மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு, மேயர் சத்யா மாலை அணிவித்து, தலா 10 சவரன் தங்க செயினை அணிவித்தார். தன்னை மாநகர செயலராக நியமிக்க பரிந்துரைத்ததற்காக, இதை அவர் செய்தார் என கூறப்படுகிறது.


latest tamil news


'இது எதற்கு...' என்பது போல 'ரியாக் ஷன்' செய்த அமைச்சர் காந்தி, அந்த தங்க செயினை உடனடியாக தன் கழுத்திலிருந்து கழற்றி, தன் பாதுகாவலரிடம் கொடுத்தார். இது, மேயர் சத்யாவை அதிர்ச்சியடைய செய்தது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, ''கடைக்கோடியில் உள்ள தொண்டனுக்கு செய்யுங்கள்... அப்போது தான் கட்சி வலுப்பெறும். அவன் இல்லையென்றால் நாம் இல்லை,'' எனக் கூறினார்.

இது, ஓசூரில், தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டு காட்டியதாக, கட்சியினர் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

Tamilan - NA,இந்தியா
13-நவ-202215:24:39 IST Report Abuse
Tamilan அமைச்சரின் செயல் ஒவ்வொரு தொன்டர் மீதும் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
12-நவ-202222:26:20 IST Report Abuse
Anbuselvan ஆமாம். அந்த பாதுகாவலர் செயினை பிறகு யாரிடம் கொடுத்தார் என கூறாமலே கதையை சஸ்பென்ஸா முடித்து விட்டீர்களே.
Rate this:
Cancel
pandi - Chicago,யூ.எஸ்.ஏ
12-நவ-202208:36:07 IST Report Abuse
pandi "உடனடியாக தன் கழுத்திலிருந்து கழற்றி, தன் பாதுகாவலரிடம் கொடுத்தார்." திருப்பித் தந்திருந்தால் ஒருவேளை நம்பியிருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X