கனமழை: 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 11, 2022 | Added : நவ 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: கனமழை காரணமாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், சிவகங்கை, நாமக்கல், கரூர், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான 'ரெட்
கனமழை: 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், சிவகங்கை, நாமக்கல், கரூர், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 'இன்று, 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக, தமிழகத்தில் 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


சிவகங்கை, கரூர், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


1. சென்னை

2. காஞ்சி

3. திருவள்ளூர்

4. செங்கல்பட்டு

5. வேலூர்

6. ராணிப்பேட்டை

7. திருவாரூர்

8. தஞ்சாவூர்

9. நாகை

10. மயிலாடுதுறை

11. விழுப்புரம்

12. அரியலூர்

13. கடலூர்

14. பெரம்பலூர்

15. புதுக்கோட்டை

16. சேலம்
17. திருவண்ணாமலை

18. கள்ளக்குறிச்சி

19. ராமநாதபுரம்

20. திருச்சி

21. மதுரை

22. தேனி



பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:


1. சிவகங்கை

2. நாமக்கல்

3. கரூர்

4. தருமபுரி

5. திண்டுக்கல்



புதுச்சேரியிலும் விடுமுறை:


'ரெட் அலெர்ட்'டை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

babu - Nellai,இந்தியா
11-நவ-202212:11:43 IST Report Abuse
babu மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் விடுமுறை விடாத அதுவும் இந்த கனமழை பெய்யும் நேரம் பிள்ளைகள் வீட்டில் மின்சாரம், இன்டர்நெட் சரிவர கிடைக்காமல் கஷ்டபடுவார்களே என்பது கூட பள்ளி மேலாளர்களுக்கு தெரியாதா அல்லது அரசு உத்தரவை நாம் எதற்கு மதிக்கணும் என்று வகுப்பு நடத்துகின்றனரா...
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
11-நவ-202208:04:13 IST Report Abuse
V GOPALAN For first year engineering students after all holidays hardly one month will be the teaching hours and that too with much qualified lecturers in all private colleges except few. How quality of education will improve. Govt schools, our CM can do home delivery the breakfast and Lunch as most of the days all schools are on leave.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X