சென்னை: கனமழை காரணமாக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், சிவகங்கை, நாமக்கல், கரூர், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 'இன்று, 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக, தமிழகத்தில் 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சிவகங்கை, கரூர், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
1. சென்னை
2. காஞ்சி
3. திருவள்ளூர்
4. செங்கல்பட்டு
5. வேலூர்
6. ராணிப்பேட்டை
7. திருவாரூர்
8. தஞ்சாவூர்
9. நாகை
10. மயிலாடுதுறை
11. விழுப்புரம்
12. அரியலூர்
13. கடலூர்
14. பெரம்பலூர்
15. புதுக்கோட்டை
16. சேலம்
17. திருவண்ணாமலை
18. கள்ளக்குறிச்சி
19. ராமநாதபுரம்
20. திருச்சி
21. மதுரை
22. தேனி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
1. சிவகங்கை
2. நாமக்கல்
3. கரூர்
4. தருமபுரி
5. திண்டுக்கல்
புதுச்சேரியிலும் விடுமுறை:
'ரெட் அலெர்ட்'டை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.