ஒடிசாவில் பயங்கரம்: திருமணம் நடந்த சில நாளில் மனைவியை விற்ற கணவர் கைது | Dinamalar

ஒடிசாவில் பயங்கரம்: திருமணம் நடந்த சில நாளில் மனைவியை விற்ற கணவர் கைது

Updated : நவ 14, 2022 | Added : நவ 13, 2022 | கருத்துகள் (9) | |
புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் திருமணம் நடந்தவுடன் வேலை தேடி, டில்லி செல்வதாக கடந்த அக்.,30ம் தேதி மனைவியை அழைத்து சென்று வேறு ஒரு நபருக்கு விற்ற நபரை கலஹண்டி மாவட்டம் நர்லா போலீசார் இன்று(நவ.,13) கைது செய்தனர்.ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக்(25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த சில

புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் திருமணம் நடந்தவுடன் வேலை தேடி, டில்லி செல்வதாக கடந்த அக்.,30ம் தேதி மனைவியை அழைத்து சென்று வேறு ஒரு நபருக்கு விற்ற நபரை கலஹண்டி மாவட்டம் நர்லா போலீசார் இன்று(நவ.,13) கைது செய்தனர்.




latest tamil news


ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக்(25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்


திருமணம் நடந்தவுடன் வேலை தேடி டில்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு நபருக்கு (பூர்ணிமா) கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் பணத்திற்காக விற்றுள்ளார். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.



latest tamil news


நவ., 5ம் தேதி பூர்ணிமா தனது தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க கூறினார். உடனடியாக பெண்ணின் தந்தை கலஹண்டி நர்லா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், கீரா பெருக்கை இன்று(நவ.,13) கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X