சூதாட்ட 'கிளப்'புகள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு

Updated : நவ 15, 2022 | Added : நவ 15, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை-'மாநிலம் முழுதும், சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், சட்ட விரோத மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல், கஞ்சா கடத்தலை கண்டு கொள்ளாமல் இருப்பது, போலீசாருக்கு மாமூல் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய

சென்னை-'மாநிலம் முழுதும், சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கிளப்புகள் நடத்துவோரை கைது செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news


தமிழகத்தில், சட்ட விரோத மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல், கஞ்சா கடத்தலை கண்டு கொள்ளாமல் இருப்பது, போலீசாருக்கு மாமூல் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது. இது தண்டனைக்குரிய குற்றம்.

'இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

மாநிலம் முழுதும் ரவுடிகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளை நிழல் போல கண்காணிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். இவர்களின் சங்கிலி தொடரை அறுக்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்கு சென்று, போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுஉள்ளார்.

இப்பணிகளில் போலீசார் ஓரளவு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுதும், சட்ட விரோத சூதாட்ட கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட 'கிளப்' நடத்தி வருகின்றனர்.

இதன் பின்னணியில், அரசியல்வாதிகளின் கைத்தடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாருக்கு சில லட்சம் ரூபாய் மாமூலாக வந்துவிடுகிறது. இதனால், சூதாட்ட கிளப்புகளை போலீசார் கண்டுகொள்வது இல்லை.


latest tamil news


உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அறிக்கையில், 'சட்ட விரோத சூதாட்ட கிளப்கள் இல்லை' என, போலீசார் தெரிவித்து விடுகின்றனர். இதுபற்றி விசாரிக்க, உளவுத்துறை போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அளிக்கும் தகவலின்படி, சூதாட்ட கிளப்புகளில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.

போலீசார் கூறுகையில்,'டி.ஜி.பி., சைலேந்திரபாபுவின் பார்வை சூதாட்ட கிளப்கள் மீது படிந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்படும் கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

duruvasar - indraprastham,இந்தியா
15-நவ-202216:21:50 IST Report Abuse
duruvasar சைக்களில் சென்றால் பிடிக்கமுடியாது . இன்னும் 15 நாட்கள்தான் ஐயா சேவை பாக்கி இருக்கு . இவ்வளவுநாட்கள் இருந்தாற்போல் இருந்துவிட்டு போய்வாருங்கள்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-நவ-202212:09:57 IST Report Abuse
Lion Drsekar நடுவில் மாட்டிக்கொண்டு தடுமாறப்போவது நேர்மையானவர்கள் மட்டுமே, அவர்களுக்கு அந்த இறைவன் மட்டுமே கதி, வந்தே மாதரம்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
15-நவ-202211:52:19 IST Report Abuse
ram 2.0 மற்றும் 3.0 முடிந்தது, இப்போது இது, நடக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X