''திராவிடர் என்பது இனம் அல்ல; ஆங்கிலேயர் சொன்னது தப்பு'': கவர்னர் ரவி பேச்சு

Updated : நவ 16, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
சென்னை: திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு என சென்னை நடந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் கவிர்னர் ரவி பேசினார்.சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிர்சா முண்டா நினைவாக நடக்கும் பழங்குடியினர் பெருமை தின விழா இன்று(நவ.,16) கொண்டாடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு என சென்னை நடந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் கவிர்னர் ரவி பேசினார்.




latest tamil news


சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிர்சா முண்டா நினைவாக நடக்கும் பழங்குடியினர் பெருமை தின விழா இன்று(நவ.,16) கொண்டாடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியவதாவது: பழங்குடியின தலைவர்கள் தியாகங்களை நினைவு கூர வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இருக்கும் வேறுபாடுகளை உடைத்தெறிய வேண்டும். பழங்குடியின மக்களுக்குள் செயற்கைத்தனமான வகைப்படுத்தலை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது.



latest tamil news


திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வட பகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு வருவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு குறித்தும், அதற்கு தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்கள்.



நீட் விலக்கு கோரி தமிழக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


Advertisement




வாசகர் கருத்து (56)

sriram - Chennai,இந்தியா
17-நவ-202210:33:02 IST Report Abuse
sriram எல்லோரும் உடன் படாத ஒரு விஷயத்தில் நமக்கு தெளிவான ஒரு கருத்து இருக்கும் பொழுது, ஒருவர் தன் கருத்தினை அந்த விஷயத்தில் நேரடியான தொடர்பில் உள்ளவர் மற்றும் அறிஞர் கூடிய சபை அல்லது விவாத மேடையில் கொண்டு வருதல் முறை. அப்படி ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுதது, அதில் தன் கருத்தினை மற்ற எல்லோரின் உடன்பாட்டுக்கு கொண்டு வருபவர் மட்டுமே, அறிஞர் அல்லது படித்தவர். இத்தகைய வழக்கம் முற்காலத்தில் வழக்கத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் படித்தவர் மத்தியில் நடைமுறையில் உள்ளது. இதை செய்யாமல், தங்களின் கருத்தினை, அதனை முழுவதும் அறியாதவரின் முன்னிலையில் வைப்பவர்கள் தங்களை எல்லாம் அறிந்தவர் என்று பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அதனை செய்கின்றனர். அது படித்தவர் செய்யும் வேலை இல்லை.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
17-நவ-202208:31:52 IST Report Abuse
Arachi இவர் நமக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை. கவர்னர் வேலையை பார்க்கட்டும். வட இந்தியர்களின் அடிமைகள் இல்லை தமிழர்கள். என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ் நாட்டில் ஊன்ற முடியாது.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202207:40:29 IST Report Abuse
venugopal s இவர் பேசுவது அபத்தமாக உள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால்" இந்தியா என்று ஒரு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அங்கு வசிப்பவர்கள் இந்தியர்கள் இல்லை " என்று சொல்வது போல் உள்ளது! இதற்கும் ஆமாம் சாமி என்று தலையாட்ட ஒரு மூடர் கூட்டம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X