ராங் சைடில் போன பெண் ஏடிஜிபி கார்: அபராதம் விதித்த சென்னை போலீஸ்| Dinamalar

'ராங் சைடில்' போன பெண் ஏடிஜிபி கார்: அபராதம் விதித்த சென்னை போலீஸ்

Updated : நவ 16, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (17) | |
சென்னை: சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக பெண் ஏ.டி.ஜி.பி., காருக்கு ரூ.500 ஐ அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அப்போது, காரில் பெண் அதிகாரி இல்லை என கூறப்படுகிறது.பெண் ஏடிஜிபி.,யின் கார் சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதாக சமூக வலைதளத்தில் படம் வெளியானது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் அதில் கேள்வி எழுப்பப்பட்டது. இது சென்னை போக்குவரத்து
police, chennai police, fine, adgp,  போலீஸ், சென்னை போலீஸ், அபராதம், ஏடிஜிபி, சென்னை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக பெண் ஏ.டி.ஜி.பி., காருக்கு ரூ.500 ஐ அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். அப்போது, காரில் பெண் அதிகாரி இல்லை என கூறப்படுகிறது.


பெண் ஏடிஜிபி.,யின் கார் சென்னையில் ஒரு வழிப்பாதையில் சென்றதாக சமூக வலைதளத்தில் படம் வெளியானது.



இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் அதில் கேள்வி எழுப்பப்பட்டது. இது சென்னை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்ததும், அந்த கார் குறித்து விசாரித்து, புகார் தெரிவித்தவருக்கு சமூக வலைதளத்திலேயே பதிலளித்துள்ளனர்.


latest tamil news


அதில், தவறான பாதையில் சென்றதற்காக கார் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் கட்டிவிட்டார். தொடர்ந்து, இவ்வாறு மீண்டும் தவறு செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள போலீசார், அபராதம் வசூலித்த சலானையும் வெளியிட்டுள்ளனர். அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X