கேட்டது நமது தேசிய கீதம்: போட்டது நேபாள தேசிய கீதம்: ராகுல் யாத்திரையில் ‛‛கலகல''

Updated : நவ 17, 2022 | Added : நவ 17, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
மும்பை: காங்கிரஸ் எம்.பி., ராகுல் யாத்திரையின் இடையே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக நேபாள நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ என்னும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில்
Nepal National Anthem, Rahul Gandhi, Bharat Jodo Yatra, Rashtriya Geet, Indian National Anthem, Rahul, Congress, Maharashtra, மஹாராஷ்டிரா, ராகுல், ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை, நடைபயணம், காங்கிரஸ், இந்தியா, தேசிய கீதம், நேபாள தேசிய கீதம், பொதுக்கூட்டம்

மும்பை: காங்கிரஸ் எம்.பி., ராகுல் யாத்திரையின் இடையே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக நேபாள நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ என்னும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.


கன்னியாகுமரியில் துவங்கிய நடைபயணம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து தற்போது மஹாராஷ்டிராவில் தொடர்ந்து வருகிறார்.



latest tamil news

இன்று பதூர் பகுதியில் இருந்து நடைபயணத்தை துவங்கினார். இன்றைய நடைபயணத்தின்போது காந்தி வேடமிட்ட சிறுவர்கள் ராகுலின் வருகைக்காக காத்திருந்தனர். நடைபயணம் துவங்கியதும் காந்தி சிறுவர்களுடன் இணைந்து ராகுல் உற்சாகமாக நடந்து சென்றார்.



நேபாள தேசிய கீதம்


முன்னதாக நேற்றைய (நவ.,16) யாத்திரையின் முடிவில் வாஷிம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். முடிவில் ராகுல், தேசிய கீதம் இசைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.


இதனைத்தொடர்ந்து கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நிற்க, இந்திய தேசிய கீதமான ‛ஜன கண மன' பாடலுக்கு பதிலாக நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல், உடனடியாக பாடலை நிறுத்த அறிவுறுத்தினார். பின்னர் நிறுத்தப்பட்டு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.



latest tamil news

காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவரான ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த அக்கட்சியினர் முயற்சித்துவரும் சூழலில் அவர் பங்கேற்ற கூட்டத்திலேயே இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் சிரித்து சமாளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

g.s,rajan - chennai ,இந்தியா
17-நவ-202222:54:21 IST Report Abuse
g.s,rajan நல்லவேளை அமுல் பேபி ராகுலின் சிச்சுவேஷனுக்கு ஏற்றாற்போல் சோக கீதம் போடவில்லை .மேலும் நர்சரி பிள்ளைகளுக்கு எப்பவும் போடப்படும் பா... பா ப்ளாக் ஷீப் ,.ரெயின் ரெயின் கோ அவே ரைம்ஸ் போடவில்லை .அதுவரை ரொம்ப சந்தோஷம் . ஜி,எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
17-நவ-202221:29:38 IST Report Abuse
Soumya காங்கிரஸ்சின் தேசப்பற்று புல்லரிக்க வைக்குது உடம்பில் ஓடுவது இத்தாலி ரெத்தமாச்சே ஹீஹீஹீ
Rate this:
Cancel
17-நவ-202221:19:12 IST Report Abuse
PREM KUMAR K R பாத யாத்திரை என்ற பெயரில் ஒவ்வொரு மாநில எல்லையில் இருக்கும் கிராமம் அல்லது நகரமாக பார்த்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தனது நாடகத்திற்கு எதிர்பார்த்தபடி மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை என்பதை ராகுலும் அவரை இன்னமும் நம்பும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் நன்கு உணர்ந்து கொண்டு விட்டார்கள். எனவே, தனக்கு கட்சியில் உள்ள மரியாதையை காப்பாற்றி கொள்வதற்கு தகுந்தபடி இந்த பாத யாத்திரையை மாற்றிட வேண்டும் அல்லது முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ராகுலின் நிலைமை சென்றுள்ளது. இதற்கு ஒரேவழி ஏதாவது ஒரு பிரச்சினையை பா.ஜ.க. ஆளும் அல்லது அதனது கூட்டணி ஆளும் மாநிலத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் கைதாகி சில நாட்கள் சிறைக்கு சென்றால் தியாகி பட்டம் பெற்று அரசியல் கடையை தொடர்ந்து நடத்தி தேர்தலில் லாபம் பெறலாம் என திட்டம் போட்டிருப்பதாக தெரிகிறது. ஆகவே தான் மகாராஷ்டிர மாநிலத்தில் காலடி வைத்த உடனேயே தனது யாத்திரையை நிறுத்த முடியுமா என ஷிண்டே அரசுக்கு சவால் விடுத்துள்ளார். கட்சி தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியலில் இவ்வளவு ஆண்டுகள் இருந்தும் முதிர்ச்சியான- பக்குவப்பட்ட- நாகரீகமிக்க ஒரு அரசியல்வாதியாக ராகுல் மாறவில்லை - மாறவும் மாட்டார் என்பதை இந்திய மக்கள் மட்டுமல்ல - தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கூட ஒப்பு கொண்டுள்ளனர். எனவே தான் காங்கிரஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை. இந்த நிலைமையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முண்ணனி தலைவர்களுக்கு மட்டுமல்ல- ராகுல்-பிரியங்கா- சோனியா விற்கு கூட சாதகமான தொகுதி தமிழகத்தை தவிர வேறு எங்கும் கிடைப்பது சந்தேகமே. தி.மு.க. ஐந்து இடங்கள் தர போவதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையானால், அவர்களில் யாரேனும் இருவர் தமிழகத்தில் போட்டியிட முடிவெடுத்தால், தமிழகத்தில் கட்சியில் இருக்கும் பல தலைவர்கள், 2024மட்டுமல்ல- எதிர் காலத்திலும் நாடாளுமன்ற உறுப்பினராவோம் என்பதை கனவிலும் நினைக்க முயற்சிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X