பா.ஜ., ஆட்சி இருக்கும்வரை இந்தியா - பாக்., நல்லுறவுக்கு வாய்ப்பே இல்லை: இம்ரான்கான்

Updated : நவ 22, 2022 | Added : நவ 22, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேசியவாத நிலைபாட்டை பா.ஜ., ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய
பா.ஜ., ஆட்சி இருக்கும்வரை இந்தியா - பாக்., நல்லுறவுக்கு வாய்ப்பே இல்லை: இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேசியவாத நிலைபாட்டை பா.ஜ., ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.



பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும்.


ஆனால் காஷ்மீர் பிரச்னை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்னையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பா.ஜ., அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்னைகளில் தேசியவாத நிலைபாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜ., ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை.



latest tamil news

2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.


நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன். உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. இவ்வாறு இம்ரான் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (53)

veeramani - karaikudi,இந்தியா
23-நவ-202210:15:49 IST Report Abuse
veeramani இந்திய தேசத்தை பற்றி பேச எந்த பாகிஸ்தனுக்கும் அருகதை இல்லை. மேலும் பகிர்ஸ்தான் இந்தியாவின் பகுதிகளான கில்ஜித் , பலடிஸ்தான் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்து அடாவடி செய்கிறார்கள். அங்குள்ள உருது பேசும் இந்திய பூர்வகுடிகளை கொடுமைகள் பல செய்கிறார்கள். காஷ்மீர் , இந்தியாவின் ஆளுமைக்குட்பட்ட ஒரு யூனியன் பிரதேசம். இதில் எவற்றாவது சொந்தம் கொண்டாடினால், அல்லது பேசினால் தக்க பதிலடி மரந ஆடியாக இருக்கும். இதே கான், கிரீக்க்கெட் விளையாடுகையில் என்னென்ன பேசினார்??? இந்தியர்கள் இனி திமிராகத்தான் இருப்போம்.
Rate this:
Cancel
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
23-நவ-202202:13:00 IST Report Abuse
naadodi எள்ளு வேணுமுன்னா எண்ணெய்க்கு காயிலாம். எலிப்புழுக்கை? உங்களோட உறவினால் என்ன ஆதாயம்?
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
23-நவ-202201:11:12 IST Report Abuse
cbonf இன்னும் 50 வருடங்களில் பாக்கிஸ்தான் என்ற நரகமே உலக வரை படத்தில் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X