மாமனிதன் படம் பார்க்காமல் ம.தி.மு.க.வினர் 'பாய்காட்'

Updated : நவ 23, 2022 | Added : நவ 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
''அவைத் தலைவரை பற்றி புகார் தெரிவிச்சும், மாவட்டச் செயலர்கள் கண்டுக்கலை பா...'' என்ற அரசியல் தகவ லுடன், அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த கட்சியிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.''சமீபத்துல, ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களுடன் வைகோ வீடியோ கான்பரன்ஸ்ல ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரு... அப்ப, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தலைமையை
வைகோ, மாமனிதன், துரைசாமி, திமுக, அமைச்சர்,


''அவைத் தலைவரை பற்றி புகார் தெரிவிச்சும், மாவட்டச் செயலர்கள் கண்டுக்கலை பா...'' என்ற அரசியல் தகவ லுடன், அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த கட்சியிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.

''சமீபத்துல, ம.தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களுடன் வைகோ வீடியோ கான்பரன்ஸ்ல ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரு... அப்ப, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தலைமையை விமர்சித்து, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதங்கள் பத்தி வருத்தப்பட்டிருக்காரு பா...

''அதோட, 'அவரது செயலை எந்த மாவட்டச் செயலரும் கண்டிக்காததும், எனக்கு பெரிய மனக்குறை'ன்னு கண்ணீர் வடிக்காத குறையா உருக்கமா பேசியிருக்காரு... ஆனா, ஒருத்தர் கூட துரைசாமிக்கு எதிராகவோ, வைகோவுக்கு ஆறுதலாகவோ ஒரு வார்த்தை பேசலையாம் பா...


latest tamil news


''இது பத்தி அவங்களிடம் விசாரிச்சா, 'அண்ணாதுரை காலத்துல இருந்த தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள்ல இப்ப இருக்கிறவர், திருப்பூர் துரைசாமி மட்டும் தான்... அவர் எழுதிய கடிதங்கள்ல நியாயம் இருக்கு... அதான், அவருக்கு எதிரா எதுவும் பேசலை'ன்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''இதே கட்சி சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வைகோ பத்தி மாமனிதன்னு ஒரு ஆவணப் படத்தை, அவரது மகன் துரை ஏற்பாட்டுல தயாரிச்சிருக்காங்கல்லா... ஊர் ஊரா போய் அந்த படத்தை துரையே போட்டு காட்டுதாரு வே...

''சமீபத்துல, திருப்பூர் மாவட்டத்துல இந்த படத்தை போட்டிருக்காவ... படம் பார்க்க, தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு குடுத்திருக்காவ வே...

''ஆனா, ஒருத்தர் கூட தியேட்டர் பக்கமே எட்டி பார்க்கலை... அதே மாதிரி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலர் ஆர்.டி.மாரியப்பன் ராஜினாமா பண்ணிட்டதால, அவரது இடத்துக்கு புதிய செயலரை வைகோ போட்டிருக்காரு...

''அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம் பகுதி ம.தி.மு.க., நிர்வாகிகளும், படம் பார்க்க வராம, 'பாய்காட்' பண்ணிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''இப்படி கஷ்டப்படறதுக்கு பதிலா, பேசாம தி.மு.க.,வோட கட்சியை, 'மெர்ஜ்' பண்ணிடலாமோன்னோ...'' என்றார் குப்பண்ணா.

Advertisement




வாசகர் கருத்து (8)

Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202215:37:30 IST Report Abuse
Bhaskaran உலகிலேயே அதிக மானம் ரோசம் உள்ள ஒரே ஆள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-நவ-202213:25:18 IST Report Abuse
duruvasar அவங்க கட்சிக்காரர்களுக்கு தெரியாதா இவர் மா மனிதன் இல்லை என்று .
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
23-நவ-202209:18:21 IST Report Abuse
Mohan மா மனிதனை எதுக்கு பாக்கனும்னு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X