வால்பாறை : வால்பாறையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். எஸ்டேட் பகுதி மக்கள், அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் நகருக்குள் வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் அனைத்தும், வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறாக ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, குறுகலான ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். உள்ளூர் போலீசாரும், வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.