ஒன்றிய கூட்டத்திற்கு அதிகாரிகள் வருகை: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்| Dinamalar

ஒன்றிய கூட்டத்திற்கு அதிகாரிகள் வருகை: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Added : நவ 24, 2022 | |
இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் வர வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் ஊர்க்காவலன்,சாந்தி முன்னிலை வகித்தனர். மேலாளர் இளங்கோவன் வரவேற்றார்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:முருகன் தி.மு.க.,


இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் வர வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் ஊர்க்காவலன்,சாந்தி முன்னிலை வகித்தனர். மேலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

முருகன் தி.மு.க., கவுன்சிலர்: பெரும்பச்சேரி ஊராட்சியில் வீடுகள் கட்டப்பட்டு வேறு ஊராட்சியில் ரசீது போடப்பட்டு மின் இணைப்பு பெற்றுள்ளனர். ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பி.டி.ஓ., சாந்தி: மின்வாரியத்திடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனலட்சுமி அ.தி.மு.க, ஒன்றிய துணைத் தலைவர்: மஸ்தூர் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமாக உள்ளது.அவர்கள் எந்தெந்த ஊராட்சியில் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்: அண்டக்குடி,புதுவலசை கண்மாய்களுக்கு வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளதால் தண்ணீர் வர முடியாத சூழ்நிலை உள்ளது.

பி.டி.ஓ., ஊர்க்காவலன்: பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

முருகானந்தம் தி.மு.க., கவுன்சிலர்: ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகள் கூட்டத்திற்கு வர வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X