எழுமலை : மதுரை மண்டல குத்துச் சண்டை போட்டி நாகமலை புதுகோட்டை ஜெயராஜ் நாடார் பள்ளியில் நடந்தது.
இதில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 17 வயது பிரிவில் 54-57 கிலோ எடைபிரிவில் நவீன்குமார் முதலிடம், 63-66 எடைபிரிவில் ஈஸ்வரபாண்டி முதலிடம், 75-80 எடைபிரிவில் நிவேக் முதலிடம், 66-70 எடை பிரிவில் நதீஷ் இரண்டாம் இடம், 57-60 எடைபிரிவில் மனோஜ் மூன்றாம் இடம், 19 வயது பிரிவு 46-49 எடைபிரிவில் அருண்பாண்டி முதலிடம், 60-64 எடைபிரிவில் நவீன் முதலிடம், 56-60 எடைபிரிவில் சடையாண்டி 2ம் இடம், 69-75 எடைபிரிவில் குகன் 2ம் இடம், 52-56 எடைபிரிவில் மனோஜ்குமார் 3 ம் இடம் பெற்றனர்.
தடகளத்தில் கோல் ஊன்றி தாண்டுதலில் நதீஷ் முதலிடம், அருண்பாண்டி, சரவணகுமார் 2ம் இடம் பெற்றனர்.
இம்மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தமிழாசிரியர் சண்முகராஜன் வரவேற்றார்.
எழுமலை போலீஸ் எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, வேலையாபாண்டி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், உதவி தலைமையாசிரியர்கள் இராமகிருஷ்ணன், குணசுந்தரி, செல்வம் மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் சிவக்குமார், விக்னேஷ்வரனை பாராட்டினர்.