ராமநாதபுரம் : \ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ.25) காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தகுதிக்கேற்ப வேலை பெறலாம்.
சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். பணிக்கு தேர்வு பெறுவதால் வேவைாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் நிறுவன பணிக்கு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம், என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.