கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நேற்று துவங்கியது.
இப்போட்டியானது மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் கவின்கலை, நுண்கலை, இசை கருவி, தோல் கருவி, காற்றுகருவி, தந்திக்கருவி, நடனம், நாடகம், மொழித்திறன், ஆகிய பிரிவுகளில் நடக்கிறது. பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவர். வட்டாரத்தில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
அதன்படி, லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் மீனாகுமாரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.