மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அருகே, ,குண்டுகல்துறை என்னும் இடத்தில், பவானி ஆற்றில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏழு பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், கரைக்கு வர முடியாத, 7 பேரும் ஆற்றின் மையப் பகுதியில் இருந்த, மரத்தில் ஏறி உயிர் தப்பினர்.
இரவு, 7:00 மணியளவில் விளாமரத்தூர் சென்ற விவசாயி, ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் நிற்பதை பார்த்து, ஆற்றிற்கு சென்று சத்தம் போட்டார். அப்போது மரத்தில் ஏறி இருந்த நபர்கள், தங்களை காப்பாற்றும் படி கூறினர். தீயணைப்பு துறையினர் பரிசல்காரர் உதவியுடன், ஏழு பேரையும் பத்திரமாக பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.