இயற்கையோடு ஒன்றி வாழ்கிறேன் என சிலர் மழை நீரைக் குடிநீராக பயன்படுத்துகின்றனர். மழைநீரை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என நம்புகின்றனர். ஆனால் மழைநீரை சரிவர வடிகட்டி, காய்ச்சி குடிக்காவிட்டால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. அதுவும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மழை நீரில் அமிலத்தன்மை அதிகம். எனவே அதனை முறையாக சேகரித்து பயன்படுத்த வேண்டும்.
மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்களோ, தாதுக்களோ இல்லை. ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் பெய்யும் மழை நீரானது வேறுபடும். உதாரணத்திற்கு, மலைப் பிரதேசங்களிலும் காற்று மாசு நிறைந்த பகுதிகளிலும் பெய்யும் மழை நீர் அவற்றின் தரத்தில் வேறுபடும். அந்த மழை நீரின் தரத்தினையும் அதனைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தையும் வைத்து அதனை ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை குடிக்கலாம். தூய்மையான பகுதியில் இருக்கும் மழை நீரை சேகரித்து குடிக்கலாம்; ஆனால் அனல் மின் நிலையம் போன்றவை இருக்கும் பட்சத்தில் அப்பகுதிகளில் பெய்யும் மழைநீரில் காற்றில் உள்ள நச்சுத் துகள்கள் கலந்து இருக்கும்.
![]()
|