விழுப்புரம்,-விழுப்புரம் அருகே பா.ம.க., பிரமுகரை கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் தனபால் மகன் ஆதித்யன், 50; விவசாயி.
பா.ம.க., நிர்வாகியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் தரப்பிற்கும் இடையே பொது இடத்தில் மண் எடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டு, முன் விரோதம் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆதித்யன், கப்பியாம்புலியூர் பகுதியில் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆதித்யன் உடலை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்.பி., ஸ்ரீநாதா மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.