சிவகாசி-சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு செல்லும் ஓடையில் பாசிபடர்ந்துள்ள கழிவு நீரால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. ஓடையை துார்வாரி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி அரசு மருத்துவமனை முன்பாக சிறுகுளம் கண்மாய் செல்லும் ஓடை உள்ளது. ஓடையில் செடிகள் உள்ளிட்டவைகளால் அடைப்பு ஏற்பட்ட நிலையில் மழை பெய்து தண்ணீர் செல்லாமல் ஓடையிலேயே தேங்கி விட்டது.
நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருகின்றவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை துார்வாரி கழிவு நீரை அகற்ற வேண்டும். இதனால் கண்மாய்க்கும் தண்ணீர் செல்லும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.