வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ., 17 முதல் 23 வரை காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.
இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 34 மி.மீ.,
பதிவான அளவு 3 மி.மீ.,
இது இயல்பை விட 91 சதவீதம் குறைவு.
16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.
அக்.,1 முதல் நவ.,23 வரை காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் பதிவான வடகிழக்கு பருவமழையின் அளவு 330 மி.மீ.,
இயல்பான அளவு 317 மி.மீ., இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதமாக இருந்த பருவமழையின் அளவு, தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி அமைந்துள்ளது.
நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.