முருகனுக்கு பல்வேறு பொறுப்பு: பா.ஜ.,வின் புதிய திட்டம்: ‛டில்லி உஷ்ஷ்ஷ்'

Updated : நவ 27, 2022 | Added : நவ 26, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
பிரதமர் மோடி, சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் விழாவை துவக்கி வைத்தார். இங்கு, தமிழை வளர்க்க பிரதமர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.காசி -தமிழ் சங்கமம் விழா தமிழகத்தையும், வட மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி.இந்த விழாவில் தமிழகத்திலிருந்து 2,500 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒருங்கிணைத்து

பிரதமர் மோடி, சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் விழாவை துவக்கி வைத்தார். இங்கு, தமிழை வளர்க்க பிரதமர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.



latest tamil news


காசி -தமிழ் சங்கமம் விழா தமிழகத்தையும், வட மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி.

இந்த விழாவில் தமிழகத்திலிருந்து 2,500 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.


மாணவர்களை காசிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தமிழகத்திலிருந்து மாணவர்கள் காசி அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.


இந்நிலையில், அடுத்த வருடம்பிப்ரவரியில், புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கும், சென்னையில் உள்ள பல பல்கலைகளுக்கும் இடையே ஒரு போட்டி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கும் முருகன் தான் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த பொறுப்புகளை முருகனுக்குத் தர முக்கிய காரணம் உள்ளது என்கிறது புதுடில்லி பா.ஜ., வட்டாரம்.


latest tamil news


தேசிய பா.ஜ., தலைமை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், 'முருகனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே எந்த பிரச்னையும் வரக் கூடாது; அதோடு தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி பூசலும் வரக் கூடாது' என்பது தேசிய பா.ஜ., தலைமையின் திட்டம் என்கின்றனர். இதனால் முருகனுக்கு பல பொறுப்புகளை தந்து, அவரை பிசியாக வைக்க பா.ஜ., தலைமை நினைக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
27-நவ-202215:37:33 IST Report Abuse
Vijay D Ratnam மத்திய இனையமைச்சர் முருகன் நல்ல மனிதர், சிறந்த படிப்பாளி, பண்பாளர், நேர்மையானவர், மரியாதையானவர்தான். ஆனால் இந்த மக்களுக்கு நல்லவனுக்கும் பொறுக்கிக்கும் வித்தியாசம் தெரியமாட்டேங்குதே.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-நவ-202216:59:11 IST Report Abuse
Rafi குஜராத்தை கல நிலவரம் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும்....
Rate this:
Cancel
27-நவ-202211:25:21 IST Report Abuse
அப்புசாமி முருகன் தமிழக முதல்வரா வர முடியாது. இப்பிடியே இணை அமைச்சராய் நரேந்திரர், அமித் வரும்போது கூட வரலாம். காசியில் தமிழ் வளர்க்கலாம். சினிமா திருவிழாக்களை குத்து விளக்கேத்தி ஆரம்பிச்சு வெக்கலாம். ரெண்டு மூணு வருஷத்தில் மேகாலயா கெவுனராப் போய் ரிடையராகலாம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202205:07:36 IST Report Abuse
J.V. Iyer முருகன்ஜிக்கும், தமிழிசைஜிக்கும் மத்தியில் ஏதாவது முக்கிய பொறுப்புக்கள் கொடுத்து, அண்ணாமலைஜிக்கு தமிழகத்தில் சுதந்திரமாக செயல்பட வழிவிடுங்கள். காங்கிரஸ் போல தவறான முடிவெடுத்து தமிழகத்தில் படுவேகமாக வளர்ந்துவரும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X