வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி,--திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று, 24 மணிநேரம் காத்திருந்தனர்.
![]()
|
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு அதிகரித்துள்ளது.
இதனால் நேற்று காலை நிலவரப்படி, 24 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்துஇருந்தனர்.
எனவே, இலவச தரிசன 'டோக்கன்' பெறாதவர்களின் தர்ம தரிசனத்திற்கு 24 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று முதல் நான்கு மணிநேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு மூன்று முதல் நான்கு மணிநேரமும் தேவைப்பட்டன.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 157 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 31 ஆயிரத்து 445 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
![]()
|
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில், பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
அலிபிரி நடைபாதையில் காலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement