வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''கண்ணை பறிகொடுத்தவரை தலைமை கண்டுக்கலையேன்னு புலம்புதாவ வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
![]()
|
''யாருக்கு ஓய் கண் போயிடுத்து...'' என, பதற்றமாகக் கேட்டார் குப்பண்ணா.
''சமீபத்துல, ராமேஸ்வரத்துல இருந்து கடலுக்கு போன தமிழக மீனவர்கள் எட்டு பேர் மீது, இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமா தாக்குதல் நடத்தினாங்கல்லா... இதுல, தி.மு.க.,வை சேர்ந்த மீனவர் ஜான்சனின் கண்ணுல அடிபட்டு, பார்வையே பறிபோயிட்டு வே...
![]()
|
''பார்வை இழந்து, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட ஜான்சனுக்கு கட்சி தலைமை, இதுவரை எந்த உதவியும் செய்யலை... 'அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கணும்'னு, மீனவரணி நிர்வாகிகள் சார்புல, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement