வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''ஆப்பரேஷன் பண்ணியும் கூட ஆபீசுக்கு வந்திருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாருப்பா அந்த சின்சியர் சிகாமணி...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
![]()
|
''தமிழகத்துல மழை காலத்துல மரக்கிளைகள் முறிஞ்சு விழுறதும், காத்துல மின் சாதனங்கள் சேதமாகிறதும் வழக்கம்... இதனால, மின் வாரியம் சார்புல மழை 'சீசன்'ல சிறப்பு பராமரிப்பு பணிகளை செய்வாங்க...
''சேதமடைந்த மின் கம்பங்களை மாத்துறது, மின் வினியோக பெட்டி களை சீரமைக்கிறது, மின் கம்பங்களுக்கு பக்கத்துல இருக்கிற மரக்கிளைகளை வெட்டு றதுன்னு, சமீபத்துல தமிழகம் முழுக்க இந்தப் பணிகள் நடந்துச்சுங்க...
![]()
|
''இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தினமும் மாவட்ட வாரியாக அறிக்கை கேட்டிருக்கார்... இந்த மாத துவக்கத்துல, லக்கானிக்கு ஒரு ஆப்பரேஷன் நடந்திருக்குது...
''அந்த நேரத்துல, தமிழகம் முழுக்க மழையும் பெய்ஞ்சிட்டு இருந்ததால, ஆப்பரேஷன் முடிஞ்ச மறுநாளே ஆபீசுக்கு வந்து, சிறப்பு பராமரிப்பு பணிகளை முடுக்கி விட ஆரம்பிச்சிட்டாருங்க... தனக்கு ஆப்பரேஷன் நடந்த விஷயத்தைக் கூட, சக அதிகாரிகள் யாரிடமும் அவர் பகிர்ந்துக்கலை... இப்பத்தான் இந்த தகவல் தெரியவந்திருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement