புதுடில்லி: புதுடில்லியில் கணவரின் உடலை 22 துண்டுகளாக மனைவி வெட்டி குளிர்சாதனைப் பெட்டியில் வை த்துள்ளார். இதையடுத்து, உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டில் பல்வேறு தரப்பினரிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போன்று டில்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டில்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இதில் கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
அஞ்சன் தாஸ்க்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர், தொடர்பை விடவில்லை. கோபத்தில் இருந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கொலை செய்ய முடிவு செய்தார்.
கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது. கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். இவர் மகன் உதவியுடன் இந்த செயல்கள் அனைத்தும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வெட்டப்பட்ட கணவனின் உடல் பாகங்களை குளிர்சாதனை பெட்டியில் வைத்தார். 22 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை டில்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார்.
கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. தீபக் இரவில் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது.

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
அப்போது தான் அது பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ்சின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.