மதுரை: பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று(நவ.,28) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு :
* பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது.
* மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது?.
மாணவர்களுக்கு 100 சதவீதம் மது விற்பனை செய்யப்படுவதில்லையா?

* பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசால் உறுதியாக சொல்ல முடியுமா?.
* 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.