பள்ளிகளில் இலவச நாப்கின் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

பள்ளிகளில் இலவச 'நாப்கின்' உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : நவ 29, 2022 | |
புதுடில்லி :அரசு பள்ளி மாணவியருக்கு 'சானிட்டரி நாப்கின்' இலவசமாக வழங்க வேண்டும் என்ற பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும்

புதுடில்லி :அரசு பள்ளி மாணவியருக்கு 'சானிட்டரி நாப்கின்' இலவசமாக வழங்க வேண்டும் என்ற பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு, அரசு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க, மத்திய - மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X