புதுடில்லி :அரசு பள்ளி மாணவியருக்கு 'சானிட்டரி நாப்கின்' இலவசமாக வழங்க வேண்டும் என்ற பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியருக்கு, அரசு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க, மத்திய - மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement