செய்தித் துறை அதிகாரிகள் இடையே பனிப்போர்!

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கடைசி மேட்டரை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி..''வருஷா வருஷம் டில்லியில நடக்கிற குடியரசு தின அணிவகுப்புல, மாநிலங்கள் வாரியா அலங்கார ஊர்திகள் இடம்பெறும்... இந்த வருஷம் ஜனவரி 26ல நடந்த அணிவகுப்புல, தமிழக ஊர்திக்கு இடம் கிடைக்காம, பெரிய சர்ச்சையானதுங்க...''இப்ப, வர்ற ஜனவரியில நடக்கிற அணிவகுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், டில்லியில போன 24ம் தேதி நடந்துச்சு... தமிழகம் சார்புல
செய்தித் துறை, இயக்குனர், ஜெயசீலன், பனிப்போர்

கடைசி மேட்டரை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி..

''வருஷா வருஷம் டில்லியில நடக்கிற குடியரசு தின அணிவகுப்புல, மாநிலங்கள் வாரியா அலங்கார ஊர்திகள் இடம்பெறும்... இந்த வருஷம் ஜனவரி 26ல நடந்த அணிவகுப்புல, தமிழக ஊர்திக்கு இடம் கிடைக்காம, பெரிய சர்ச்சையானதுங்க...

''இப்ப, வர்ற ஜனவரியில நடக்கிற அணிவகுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், டில்லியில போன 24ம் தேதி நடந்துச்சு... தமிழகம் சார்புல செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் தலைமையில கூடுதல் இயக்குனர்கள், டிசைனர் எல்லாம் கலந்துக்கிட்டாங்க... நம்ம ஊர் சார்புல, சிறுதானியங்களின் பயன்களை விளக்குற அலங்கார ஊர்திக்கான டிசைன்களை குடுத்தாங்க...


latest tamil news


''ஆனா, அதை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் நிராகரிச்சிட்டாங்க... அதுக்கு பதிலா, 'தொழில் துறை சாதனைகளை விளக்கும் டிசைனை உருவாக்கிட்டு, அடுத்த வாரம் வாங்க'ன்னுசொல்லிட்டாங்க...

''இயக்குனர் ஜெயசீலனிடம் அரசு கேபிள் 'டிவி' பொறுப்பும் கூடுதலா இருக்கிறதால, அடுத்த கூட்டத்துக்கு கூடுதல் இயக்குனர்களை போக சொல்லியிருக்கார்... அவங்களோ, 'நாங்க மட்டும் போய், டில்லி அதிகாரிகள் ஏதாவது கட்டையை குடுத்துட்டா, வம்பா போயிடும்'னு தலைமை செயலர் மற்றும் முதல்வர் அலுவலகசெயலர்களிடம்சொல்லிட்டாங்க...

''அவங்களோ, இயக்குனரை கண்டிப்பா போக சொல்லிட்டாங்க... இதனால, செய்தி துறைக்குள்ள பனிப்போர் ஓடிட்டு இருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
30-நவ-202213:39:08 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy டில்லி செல்வதற்கெல்லாம் பயமொன்றும் கிடையாது. 2022 வருடத்தில் திட்டமிட்டே டில்லி அலங்கார ஊர்திகளை நிராகரித்தது போல் நாடகமாடி ராமசாமியை சுதந்திரப் போராட்ட தியாகியாக்கி மாநிலம் முழுவதும் ஊர்தி ஊர்வலம் விட்டதைப் போல 2023க்கு கருணாநிதியை தியாகியாக்க மாநில அரசு முடிவு செய்துவிட்டோம் என ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. திராவிட மாடலில் எதுவும் சாத்தியமாகலாம்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202214:04:27 IST Report Abuse
vpurushothaman செய்தித்துறையில் இத்தனை குறைகளா? நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X