ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
மண்டபம் வேதாளை கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு லாரி, 6 டூவீலர்களில் 12 மர்ம நபர்கள் வந்திறங்கினர். லாரியில் இருந்த மூடைகளை ஒரு நாட்டு படகில் ஏற்றிய போது போலீசார் சுற்றி வளைத்தனர்.
அனைவரும் தப்பி ஓடினர். இதில் 17 வயது சிறுவன் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டார். படகை சோதனையிட்டதில் 50 மூடையில் 1,496 கிலோ விரலி மஞ்சள், 400 கிலோ மஞ்சள் பவுடர் இருந்தது. இதனை இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தனர்.
இதன் இலங்கை மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து மஞ்சள் மற்றும் 6 டூவீலர்கள், ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.